Friday 29 July 2022

NANBAN...

நண்பன்...



1


*முகத்துக்கு
முன்னால்
திட்டியும்!!!...
முதுகுக்குப்
பின்னால்
தட்டியும்
மட்டுமே
கொடுப்பான்!!!
நண்பன்!!!...

2

*எனக்கு
இரண்டாம்
ரசிகன்!!!...
முதல்
விமர்சகன்!!!
நண்பன்!!!

3

*நண்பனில்
கெட்டவன்
மட்டுமல்ல!!...
சிறந்தவன்
என்றும்
யாருமில்லை!!!...

4

*காதலுக்கு
தூதாவான்!!!...
காதல் காயத்துக்கு ...
மருந்தாவான்!!!...
நண்பன்!!!...

5


*நண்பன்
எதிரியாவது
கொடுமை!!!...
துரோகியாவது...
மிகப்பெரும்
கொடுமை!!!...

6

*வாழ்க்கையில்
எல்லா அசையும்
சொத்தையும்
இழந்தாலும்!!!...
இழக்க விரும்பாத
அசையும் சொத்து!!!...
நண்பன்!!!...

7


**காதலியின்
காயத்துக்கு...
நண்பன்
மருந்தாவான்!!!...
நண்பனின்
காயத்துக்கு...
அவன் மட்டும்தான்
மருந்து!!!...

8

**திருக்குறளை
போல
 உலக பொதுமறை!!!...
திருப்புகழையும் விட
அதிகம்
மணப்பவன்
நண்பன்!!!...

9

*காதலில்கூட...
சாதி...மதம்...நிறமுண்டு!!!...
எல்லாம் கடந்த உறவு!!!
நட்பு!!!

10

*தான் தோற்றாலும்
தன்  நண்பனின்
வெற்றியில்
பெருமிதம்
கொள்ளும்!!!...
நட்பு!!!...

11

*அப்பா...அம்மா...
இல்லாவிட்டாலும்...
ஒரு
நல்ல நண்பன்
இருந்துவிட்டால்...
யாரும்...
அனாதையில்லை !!!

12

*கிழிக்க...
தொலைக்க...
மனமில்லாத...
எத்தனை முறை
படித்தாலும்...
சலிக்காத
புத்தகம்!!!...
நண்பன்!!!...

13

*காதலி இல்லாத
உலகத்தை
கற்பனை
செய்யலாம்!!..
ஆனால்...
நண்பன் இல்லா  உலகம்!!!...
கற்பனைகூட
செய்ய முடிவதில்லை!!!

14


*போனை எடுத்தவுடன்
ஹலோ!!!
சொல்லாமல்
சொல் !!
நண்பா!!!
ஆரம்பிப்பான்...
நண்பன்!!!...




15

*உண்மையான
ஆண் -பெண்...
நட்பு...
காதலைவிட
மேலானது!!!...
கற்பைவிட
புனிதமானது!!!...

16

*உயிர் கொடுப்பாள்
அம்மா!!!...
அந்த உயிரைக் காக்க
தன் உயிரையே...
தருவான்
நண்பன்!!!...

17


*காதலியைவிட
நிறைகளையும்....
மனைவியைவிட
குறைகளையும்...
அறிந்தவன்
நண்பன்!!!...

18

*நீ அழுதால்
சிரிக்காத ...
நீ உடைத்தாலும்...
அத்தனை
துண்டிலும்...
உன்னையே காட்டும்
கண்ணாடி...
நண்பன்!!!...

19

* தன்னை..
.எதிரியாய்...
நினைப்பவனையும்...
தூரத்து நண்பனாய்...
அழகு பாராட்டும்!!!
நட்பு!!!...

20

*நண்பனின்
நண்பன்...
நண்பனாவது.தான் ..
நட்பின் அதிசயம்!!!..

21

*தாய்...தந்தை...
ஆசிரியரையும்போல ...
உன்னுடைய
உயர்வில்
பொறாமைப்படமாட்டான்!!!...
நண்பன்!!!...

22

**மனசு சரியில்லை!!!
சொல்லும்போது...
பீர்...
ஊற்றிக்கொடுத்து...
சொல்லுடா!!!
கேட்கும்...
நண்பன்!!!...
வரம்!!!... 


*ஆத்தா வைத்த சோறு!!!
நண்பன் ஊற்றிய பீர்!!...
இரண்டுமே
மறக்க கூடாதவை!!!...


23

*பழகிய
காதலிக்காகத்தான்...
உயிர்தரும் காதல்!!!
ஆனால்...
பார்க்காத
நண்பனுக்காக
உயிர் தந்த
நட்பு
இலக்கியம் !!!...

24

*பிரிந்த காதலியை
பார்க்க விரும்பாதவன்கூட ...
பிரிந்த
நண்பனை
பார்க்க விரும்புவதே...
நட்பு !!!...

25

*சொல்லாத காதல்
மட்டுமல்ல!!!...
நண்பன் இல்லாத
வாழ்க்கையும்
நரகம்தான்!!!...

26

*உப்பில்லா
உணவும்...
நட்பில்லா
உறவும்...
குப்பைக்குத்தான்
போகும்!!!...


27


 *உறவுக்குள்
ஈகோ இருந்தாலும்!!!...
ஈகோ இல்லாத
ஒரே உறவு!!!
நட்பு!!!...

28

*நண்பனின் தங்கையை
மட்டுமல்ல!!!...
அவன்
காதலியையும்
தங்கையாகவே
பார்ப்பான்!!!...
நண்பன்!!!...

29

*மச்சான்...
பாசத்தோடு நண்பனை
அழைத்தாலும்...
நண்பனின்
தங்கையிடம்
கண்ணியம் காப்பதே!!!
நட்பு!!!...


30

சூட முடியாததுதான்!!!...
ஆனால்
வாடாத...
வாசம் குறையாத பூ!!!...
நட்பு!!!...








 நண்பர்கள்தின வாழ்த்துகள்...

Friday 20 August 2021

💋

**உண்மையான அன்பை  
    உணர்ந்தவர்களுக்கு 
    மட்டும்தான் தெரியும்!!!...
    காமத்தில்...
    சேர்ந்ததில்லை!!!...
    💋


 **காதலின் தொடக்கம்!!!...
     காமத்தின் முடிவு!!!...
💋

**உலகம் முழுவதும்...
    சேரும் போதும்...
    பிரியும் போதும்...
    அன்பின் மொழி!!!...


**இந்த அவசர உலகில்...
    உறவுகளை  
    இன்னும்  பிணைத்து... 
வைத்திருக்கும் 
சங்கிலி பாலம்!!!...
💋


**பெறுவது மட்டுமல்ல...
கொடுப்பதும் கூட...
மகிழ்ச்சிதான்!!!...
உன்னத தத்துவம்!!!...
💋

**காயத்துக்கு...
காலம்தான் மருந்து!!!...
அதை விடவும்...
சிறந்த மருத்துவம்!!!...
💋

*கொடுக்க... கொடுக்க...
கோபம் குறையும்!!!...
 கொடுத்துக்கொண்டே ...
இருந்தால் ஆயுள் கூடும்!!!...
💋


**உன் பேரை 
சொல்லும் போது 
ஒட்டவில்லை!!!...
என்றைக்கு...
நம் உதடுகள்!!!
💋

**உன்னிடம்..
நான் கேட்டு எதையுமே...
 நீ தந்ததில்லை...
 கடைசியாய் இந்த...
💋

**கனவில் ஒருமுறைகூட...
 மறுத்ததில்லை!!!
நினைவில் ஒருமுறைகூட 

கொடுத்ததே இல்லை!!!...
💋


** காதலைப் போலவே 
கடைசி வரை...
வெறும் கனவாய் 
போய்விட்டது!! ...
💋

**இனி  உனக்கு  
யார் கொடுத்தாலும்...
நீ யாருக்கு கொடுத்தாலும்...
என்னையே நினைவுக்கு கொண்டுவரும்!!!...
💋

**இனி நான் 
கேட்க மாட்டேன்!!!...
ஆனால்
 என்றாவது நீ தர விரும்புவாய்!!!...
💋


** காத்திருந்து...காத்திருந்து...
கவிதை கிடைத்துவிட்டது!!!...
 ஆனால்...
கடைசிவரை...
கிடைக்கவே இல்லை!!!...
💋 

**எனக்குத்தான் தரவில்லை!!!...
இந்த கவிதைக்காவது...
கொடுத்துவிடு!!!...
💋

** முதல் இரவு...
முதல் காதலை போலவே...
மறக்க முடியாதது!!!...முதல் 
💋

**சர்க்கரை நோயாளிகள் கூட...
தினமும்...
எடுத்துக் கொள்ள
வேண்டிய 
 இனிப்பு மருந்து!!!...
💋


** என் முகத்தையும்...
மூடும் முன்பு...
முதலும் கடைசியுமாய்...
என் நெற்றியில் பதிந்து விடு!!!..
💋

Tuesday 4 September 2018

ASIRIYAR...

செப்டம்பர் -5


மாதா...பிதா...குரு தெய்வமென்று
யாருக்கும் சொல்ல மனமில்லை!!!..
ஆசிரியர் பணிஅறப்பணியென்று
ஆசிரியர்கள் மட்டும்தான் சொல்கிறார்கள்!!!...
சம்பளம் வாங்கவதையே சலுகையென
குறைக்கச் சொல்லி கூவத்தூர்
குள்ளநரி ஓலமிடுகிறது....
உங்களுக்கு சிரமம் வேண்டாம்...
நாங்கள் மக்கள் பணி செய்கிறோம்...
நீங்கள் மாணவரை உருவாக்குங்கள்...
ஆசிரியர்களை குறை சொல்லவே
குறை குடங்கள் கூத்தாடுகின்றன...
உங்களுக்கு தெரியுமா?...
ஜெர்மனியில் நீதிபதியைவிட
ஆசிரியருக்கு ஊதியம் அதிகம்...
ஜப்பானில் ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு
எல்லா நாட்டையும்விட அதிகம்...
அப்துல்கலாமும் முதல் குடிமகனைவிட...
விரும்பியது ஆசிரியர் பணி...
நம் நாட்டில் கந்துவட்டிக்காரர்களிடம்தான்
நிறைய ஆசிரியர்கள் வட்டிபோக
மீதி சம்பளமே வாங்குகிறார்கள்...
வட்டிக்குவிடும் ஆசிரியரைவிட வட்டிக்கு வாங்கும்
ஆசிரியர்கள்தான் மிக அதிகம்...
முதலில் ஆசிரியர்க்கு போதிக்கும்
பணியை மட்டும் கொடுங்கள்...
ஆசிரியர்க்கு போதிப்பதைவிட
பொதிசுமக்கும்  வேலையே அதிகம்...
செருப்பு முதல் நாப்கின்வரை...
வகுப்பறை முதல் கழிவறை வரை...
எல்லாவற்றுக்கும் பொறுப்பு...
படிக்காத....பள்ளி  வராத
எதையும் கேட்காத... எல்லோரையுமே
தேர்ச்சி பெற வைக்கவேண்டும்...
இத்தனை விடுமுறையா?
கேள்விகள் சுலபம்...
ஆசிரியருக்குத்தான் அரசு ஊழியர்களில்
குறைந்த விடுப்பு...
மருத்துவ விடுப்பையே எடுக்காத
ஆயிரம் ஆயிரம் ஆசிரியர்கள் உண்டு...
காலை...மாலை... விடுமுறைகளில்
சிறப்பு வகுப்புகள் போதிக்கும்
பலரைக் காட்ட முடியும்...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து
சேர்த்தவரென்று வருமானவரி
சோதனையில் இதுவரை
எந்த ஆசிரியரும் சிக்கியதில்லை...
லஞ்சம்... ஊழல்...  ஆசிரியர் பணியில் இல்லை...
என் குழந்தைகள் என்று தன்
வருமானத்தில் கொஞ்சம்
கொடுக்கும் ஆசிரியர்கள் நிறையபேர்...
நீச்சல் தெரியாவிட்டாலும் தன்
உயிரையும் தந்து  தியாகம்
செய்த ஆசிரியை உண்டு...
குறை சொல்லும் அறிவிலிகளே!!!...
உங்கள் குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பாதீர்கள்...
எந்த ஆசிரியரையும் சாராமல்
நான் மட்டுமே படித்து உயர்ந்தேன்...
சொல்ல வைத்துக்கொள்ளுங்கள்!!!...
வாழ்வில் பாதியை படித்துவிட்டுதான்
இந்த சேவைக்கு வந்திருக்கிறோம்!!!...
அரசியலில்...திரைப்படத்தில்...தொழில்துறையில்...
எல்லோரையும்விட ஆசிரியர் அதிகம்
சேர்த்துவிடுவதில்லை....
அதிகபட்சம் ஒரு சொந்தவீட்டோடு
அவரின் மொத்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது...
போற்றாமல் இருந்தாலாவது பரவாயில்லை...
பொறாமைப்படாமல் இருங்கள்...
எதிர்காலத்தில் கல்வி முழுதும் தனியார்மயமாகும்...
இருக்கும் கோவணத்தையும் உருவியபிறகு புரியும்...
அரசுப் பள்ளிகள் சாதித்த விடயம்...
கல்வி   தனியார்மயமாதலின் விபரீதம்...
பிராய்லர் கோழிகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்...
முடிந்தால் கல்வித்தந்தைகளை விமர்சியுங்கள்....
கல்வி கட்டணத்தை இல்லாமல் செய்து 
இலவசமாய் தனியாரிலும் தர வையுங்கள்...
குரு...வாத்தியார்...
இப்போது வாத்தி ஆனதில்
மாணவர் கைகளில் கத்தி...
ஆசிரியர்க்கு இல்லை சக்தி...
உண்மை கசக்கும்...
மருத்துவம் படித்து சேவை செய்யப்போகிறேன்...
சொல்ல எல்லோரும் உண்டு...
யாரும் ஆசிரியர் படிப்பு முடித்து
சேவை செய்ய விரும்புவதில்லை...
இப்போதெல்லாம் எந்த மாணவனும்
ஆசிரியராக விரும்புவதில்லை...
அடுத்த தலைமுறையை நினைத்து 
அவர்களே பயப்படுகிறார்கள்...
எந்த ஆசிரியரும்கூட
தன் மக்களை
விவசாயியைப் போலவே...
ஆசிரியராக்கவும்  விரும்புவதில்லை...
இன்றைய உண்மை இதுதான்....
அர்ப்பணிப்பு கொண்டு இன்னும் 
எதையும் தாங்கும் இதயம் கொண்டு...
சோர்வடையாமல் மாற்றம் தந்து 
ஏற்றம் தரும் ஏணிகளுக்கு 
ஆசிரியர் தின வாழ்த்துகள்....


































Saturday 9 December 2017

naan+nee=naam...

நான்+நீ=நாம்!!!...


* நான் உந்தன் தண்ணீர்!!!...
எனக்கென்று தனியாய் 
நிறமில்லை!!!...
மணமில்லை !!!...
நீ விரும்பும் வடிவம் 
நான் எடுப்பேன்!!!...
உன் உயிர்தாகம் தீர்ப்பேன்!!!...
மழையாய் வருவேன்!!!...
 முழுதாய் நனைப்பேன்!!!...

*நான் உந்தன் நிலம்!!!...
உன் பார்வையின் 
நீளம்தான் என் எல்லை!!!...
வேறு யாரும் வசிக்க...
இங்கு இடம் இல்லை!!!...


*நான் உந்தன்  நெருப்பு!!!...
உன்னைச் சுற்றித்தான் 
எரிந்து கொண்டேயிருப்பேன்!!!...
எனை எரித்து மெழுகாய் 
உருகி ஒளி தருவேன்!!!...
நீ அணைத்தால் மட்டுமே 
கட்டுப்படுவேன்!!!...
எப்போதுமே நான் 
அணையாமல் உடனிருப்பேன்!!!...
உன்னை அணைத்தே 
உன்னோடு உயிர்விடுவேன்!!!...


*நான் உந்தன் காற்று !!!...
புயலாய் தாக்குவேன்!!!...
தென்றலாகவும் உன்னை 
தாலாட்டுவேன்!!!...
நீ சுவாசிக்க மட்டுமே 
நானிருப்பேன்!!!...
உன் மூச்சோடுதான் 
கலந்திருப்பேன்!!!...
நீ சுவாசிக்கவில்லையானால் 
உயிர்விடுவேன்!!!...

*நான் உந்தன் வானம்!!!...
நீ தொடும் தூரத்தில் 
நானிருப்பேன்!!!...
உன் சிறகின் 
எல்லையாய் நான் விரிவேன்!!!...
வானவில் மட்டுமல்ல!!!...
வாழ்வின் அத்தனை 
வண்ணங்களையும் தருவேன்!!!...

*நான் உன் கண்ணாடி!!!...
நீ அழும்போது கண்டிப்பாய் 
நான் சிரிக்கமாட்டேன்!!!
உனக்காக மட்டும்தான் விழுவேன்!!!...
எத்தனை துண்டுகளாய் 
வேண்டுமானாலும் 
நான் உடைவேன்!!!...


Monday 2 October 2017

KATHAL...

காதல் !!!!

1

முன்பு உன்மீது
காதல் இருந்தது!!!...
யாரிடமும்
காமம் தோன்றவில்லை!!!...
இப்போது
உன்னிடத்திலும்
காமமில்லை!!!


2

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தம் மட்டுமல்ல!
சிலநேரங்களில்
அன்பும்கூட விஷம் தான்!...
காதல்!!

3

முன்பு
தனியாய்
சிரிக்க வைத்து...
இப்போது
தனிமையில்
அழவைக்கிறது!!!...
காதல்!!!!...

4

மிருகத்தை
மனிதனாக்கி...
மனிதனின்
தெய்வத்தை
வெளிக்கொணர்கிறது!!!...
காதல்!!!...

5

உனக்கு
நடக்காதவரை...
காதல்...
வேடிக்கைதான்!!!...

6

உறவுகளிடம்
மட்டுமல்ல!!!...
நட்பிடமும்
பொய் பேசும்!!!...
காதல்!!!...

7

எல்லாம்
 பெற்றிருந்தாலும்...
எதையோ
ஒன்றை
இழந்ததாய்
உணர
வைப்பதுதான்
காதல்!!...

8


ஒரு உண்மைக்காக...
எல்லோரிடமும்
பொய்யாய்
போகும்...
காதல்!!!...

9


உன்னோடும்
சிரித்து ...
உனக்காக அழும்!!!...
காதல்!!!...


10

உடலால் 
மட்டுமல்ல!!!...
உள்ளத்தாலும் 
இன்னும் 
பெண்ணை 
வலிமையாய்...
உணரவைக்கும்!!!...
காதல்!!!...

11


என் திமிர்...
கோபம்...
அகம்பாவம்...
பிடிவாதம்...
மொத்தமும்விட்டு
கெஞ்சவைக்கிறது!
கொடுமையான... 

காதல்!...


12


நீ  வெறும்
வார்த்தை!!!...
ஆனால்
நான்...
வாழ்க்கை !!!...
இப்படிக்கு
காதல்!!!

13

நம்பிக்கையை
நீ
காப்பாற்றததால்...
இப்போது
செத்துவிட்டது...
காதல்!!!...

14

அம்மாவாக்குவது அல்ல!...
அம்மாவையும்விட
உன்னை
அன்பில் அதிகம்
அழவைப்பதுதான்
என் உண்மையான
காதல்!!...


15


புரிந்தவர்களுக்கு
மொழி தேவையில்லை!!!...
புரியாதவர்களுக்கு
எந்த மொழியிலும்
புரியப்போவதில்லை!!!...
காதல்!!!...


16


வாழ்க்கையில் 
உண்மைக்காதல்
ஒருமுறைதான்
கிடைக்கும்!!...
மறுமுறை
கிடைத்தால்
உண்மையில்லை
காதல்!!...

17


உன் உடல்தான்
என் தேவை என்றால்...
அதை
எப்படியும்
அடைந்திருப்பேன்!!!...
இப்படிக்கு
காதல்!!!...

18

காலங்காலமாய்...
காதலர்கள்
தோற்றுப்போக...
எப்போதுமே
கம்பீரமாய்
ஜெயிக்கிறது!!!...
காதல்!!!...

19

நம்பிக்கை தான்

 கடவுள் எனநினைத்திருந்தேன்!எனக்கு கடவுள் நம்பிக்கையையும்தந்தது...

 காதல்!!!..


20

காதல் 
என்பது 
சேர்வதுமில்லை!!!
பிரிவதுமில்லை!!!...
வாழ்வது!!!...வாழ்த்துவது!!!
வாழ்க...வளமுடன்.... 

















Wednesday 21 June 2017

KANAVAA!!! EN KANAVAA!!!



காதல் கணவா !!!... என் கனவுக்  காதலா!!!
காலையில் நீ எழுகையில்... என் நெற்றியில் முத்தமிடு!!!...
காதில் செல்லமாய் கடித்துவிட்டு தினமும் என் காதோடு சொல்!!!...
நான் உன்னைக்  காதலிக்கிறேன்!!!...
என் ஒவ்வொரு விடியலும் உன் காதலோடு விடியட்டும்!!!...
இதுபோதும் எனக்கு!!!...
உனக்கு பின்னால்தான் நான் எழுவேன்!!!...
ஆனாலும்  நான் பத்தினிதான்!!!...
பல் துலக்காமல் முத்தம் வை!!!
 பால் கலந்து காபி கொடு!!!
சமையல் மந்திரம் எனக்குப் புதிது!!!...
நான் என்ன செய்தாலும் கொண்டாடு!!!...
உப்பில்லையென்றாலும் தப்பு சொல்லாதே!!!...
பிடிக்கவில்லையென்றாலும் பிடித்ததென சொல்!!!...
உன் அம்மாவின் சமையலைவிட
நான்தானென பெருமை சொல்!!!...
உன்னை அனுப்ப வாசல் வருவேன்!!!...
நீ வரும்போதெல்லாம் வாசலில் இருப்பேன்!!!...
ஆயிரம் கவலை!!!...கோபம் இருக்கலாம்!!!...
மொத்தமும் கொட்டு!!!...
உன் அன்பு மட்டுமல்ல!!!
உன் கோபமும் எனக்கு மட்டும்தான்!!!...
யார் வேண்டுமானாலும் உன்னைக் காயப்படுத்தட்டும்!!!...
மருந்தாய் நான் இருக்கிறேன்!!!...கவலைப்படாதே!!!...
கண்ணாளா!!!...இரவின் சண்டையை
விடியலில் நீட்டிக்காதே!!!...
பகல்பொழுதை யுகமாய் மாற்றாதே!!!...
பேசாமல் மட்டும் இருக்காதே!!!!,,,
அது...அடித்தால் வலிதரும்...
அத்தனை டன்னையும்விட வலியது!!!...
வேண்டாமென்று விளையாட்டுக்குக்கூட சொல்லாதே!!!...

செத்துபோவென்று மொத்தமாய் சொல்லிவிடு!!!...
உன் நண்பர்களோடு நீ இருக்கும் நேரத்தைக்கூட...
நீ எனக்கு தந்தால்  பிடிக்கும்!!!...

உன் நேரம்கூட எனக்கு மட்டும்தான்!!!...
உனக்கு உன் உலகில் நானும்...
எனக்கு நீ மட்டும்தான் என் உலகம்!!!...
என்னோடு நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை!!!...
நான் பேச... கேட்க காது கொடு!!!...
கலாபக் காதலா!!!
தோழிகளோடுகூட சுற்ற எனக்கு பிடிக்காது!!!...
உன்னோடு வர ஏங்குகிறேன்...
வீட்டில் நீ இருந்தால் நீதான் என் கண்ணாடி!!!...
உன்னோடு வருகையில் மட்டும் பார்ப்பேன் நான் ...கண்ணாடி!!!...
பொருத்தமாய் உடை எடுத்துக்  கொடு!!!...
நீ இனி எடுக்கப்போகும் உடைக்கும்...
புடவை கணக்கு கேட்காதே!!!...
சுடிதார்!!!...ஜீன்ஸ்!!!... மிடி!!...! டாப்ஸ்!!!...
அத்தனையும் எடுத்துக் கொடு!!!...
நான் அழகாய்...இளமையாய்...
உன்னால்தான் என்று உலகம் உணரட்டும்!!!...
நீ சொல்லாமல் என் அழகு முழுமை இல்லை...
ஆயிரம் உடைகள் நான் உடுத்தினாலும்...
இரவில் நான் உடுத்திக் கொள்ள விரும்பும்
என் ஒரே உடை  நீ மட்டும்தான்!!!...
ரகசிய சினேகிதா!!!
பொக்கிஷம் நான்!!!...தேடு!!!...
இரக்கமில்லாமல் கொள்ளையடி!!!...
கட்டிலிலும்  நீ அசைவமாகவே இரு...
உனக்கு எப்போது வேண்டுமோ ...
அப்போதெல்லாம் தொல்லை செய்!!!...
உன்னைப்போலொன்று...என்னைப்போலொன்று...
கருணைக்கு பரிசாய் தருவேன்!!!....
ஆண்  மகன் நான் பெற்றெடுத்தலும்...
எனக்குப் பிடித்த ஆண் உலகத்தில்
நீ மட்டும்தான்...
தாயானாலும்...எனக்கு தகப்பனும் நீதான்!!!...
பிரசவம்  முடித்து கண் விழித்து நான்
பார்க்க விரும்பிய என் முதல் குழந்தை நீதான்!!!...
எப்போதும் நீ முன்னால் ஓடுவாய்!!!...
துரத்த முயன்று தோற்றுப்போவேன் நான்...
என் காதல் உண்மை என்றால்
ஒருநாள் உனக்கு முன்னால்
நான் போய்விடுவேன்!!!...
இல்லையென்றாலும்...
உடன்கட்டை ஏறி உன்னோடு கலப்பேன்!!!...
காதல் கணவா!!! என் கனவுக்  காதலா!!!
இதுபோதும் எனக்கு...
என் எல்லா பிறவியும் உனக்கு!!!...



Sunday 18 June 2017

appa...

தாயுமானவன்...


1


**அப்பாவின்
கோபத்தில்...
அன்பு 
புரியுமானால்...
அப்பாவை 
மிகப்பிடிக்கும்!!!... 


2


**தன் வயதில் 
தனக்கு 
ஆசைப்பட்டு...
கிடைக்காததை எல்லாம்...
தன் மக்களுக்கு...
கிடைக்க 
பாடுபடுவார்...
அப்பா!!!


3


**உணவகத்துக்கு
செல்லும்போதுகூட...
எல்லோரும்
விரும்பியதைச்
சாப்பிட...
தான்
இட்லி மட்டுமே
சாப்பிடுவார்!!!...
அப்பா!!!...


4



**துணிக்கடையில்...
எல்லோருக்கும்
பிடித்ததை
வாங்கிக்கொடுத்துவிட்டு...
கைக்குட்டை வாங்கி...
கண் துடைத்துக்கொள்வார்!!!...
அப்பா!!!...


5

**அப்பாவின் 
தோளில் சவாரி 
பழகிவிட்டு...
சொந்தக்காலில் 
நிற்கும்போது 
தெரிகிறது!!!..
அவருக்கு 
எவ்வளவு 
வலிக்குமென்று!!!... 

6

**அப்பாவுக்கு 
பிடித்த 
மகனாய் இருக்கும் 
அதிர்ஷ்டம்...
எல்லா 
மகன்களுக்கும் 
கிடைப்பதில்லை!!!... 


7


**தன்னை 
தன் 
மகன் புரிந்துகொள்ளாத 
போதுதான்...
அப்பாவுக்கு...
தன்னுடைய 
 அப்பாவை மிகவும் 
பிடித்துப்போகிறது !!!... 

8


**சிறந்ததை 
 மட்டுமே தர 
ஆசைப்படும் 
தகப்பனிடம் 
பிடித்ததைத்தர 
புரியவையுங்கள்!!!...

புண்படுத்தாதீர்கள்!!!...

9


**அப்பாவின் 
கண்டிப்பின் 
அன்பு...
அப்பாவாகும்போதுதான்...
புரிகிறது!!!...

10


**சிறுவயதில்
தான் ஏக்கமாய்...
பார்த்ததை எல்லாம்...
தன் மகன்...மகளுக்கு ...
பாசத்தோடு...
பெருமிதத்தோடு...
வாங்கித்தருவார்!!!...
அப்பா!!!...

11

பாசம் மட்டுமே
இருப்பதுபோல்...
நடிக்கத் தெரியாத...
கோபமாய் மட்டும்
நடிக்கத் தெரிந்தவர்தான்...
அப்பா!!!...

12

வாழ்க்கையெனும்
திரைப்படத்தில்...
முதல் பாதியில்
வில்லனாகவும்...
இரண்டாம்பாதியில்
கதாநாயகனாகவும்...
மகனால்
உணரப்படுபவர்தான்...
அப்பா!!!...

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...